குமுதம் & கிருஷ்ணமாச்சார்யா வழங்கும்
ஆரோக்கிய வாழ்வுக்கான யோகா
இன்றும் இந்தியாவைப் பார்த்து உலகமே வியக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று, நமது பாரம்பரியமான யோகக் கலை. உடல், மனம் மற்றும் ஆன்மாவின் நலனை ஒருங்கிணைக்கும் இந்த மாபெரும் பொக்கிஷம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.
‘தினமும் 20 நிமிடம் யோகா & உங்கள் முழு நாளையும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றும் என்பது யோகாவின் சிறப்பு.
வருகின்ற ஜூன் 21 ம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசார மரபுகளைப் பேணிவரும் கிருஷ்ணமாச்சார்யா யோகமந்திரம் நிறுவனத்துடன் இணைந்து, குமுதம் தனது வாசகர்களுக்காக ஒரு சிறப்பு ஆன்லைன் யோகா பயிற்சி வகுப்பை, (கட்டணம் எதும் இல்லை) நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
ஜூன் 15 முதல் ஜூன் 24 வரை (10 நாட்கள்) தினமும் காலை 6:15 மணி முதல் 7:00 மணி வரை இந்தப் பத்து நாட்களும் ஆன்லைனில் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்படும். யோகாவின் அடிப்படை முறைகள், சுவாசப் பயிற்சிகள், உடல் நலத்தை மேம்படுத்தும் யோகாசனங்கள் மற்றும் மன அமைதியை வளர்க்கும் நடைமுறைகள் ஆகியவை கற்றுத்தரப்படும்.
குமுதம் வாசகர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.